தா.பேட்டை: தா.பேட்டை அடுத்த மகாதேவிகிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் ரேணுகா (20). இதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜ்குமார் (23). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாகவும், சில தினங்களாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ராஜ்குமார் தனது தங்கையை மகாதேவி கைகாட்டியில் பஸ் ஏற்றிவிட்டு திரும்பி கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ரேணுகாவை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்து தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனமடைந்த ரேணுகா சாணி பவுடர் குடித்து மயங்கி உள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் ரேணுகாவை சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் குறித்து தா.பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவி மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து ராஜ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.