திருச்சி: ரங்கத்தில் நடைபெற்ற ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் ரங்கம் கிளைகூட்டத்தில் ரேஷன் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்ட ரங்கம் கிளை கூட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாநில தலைவர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். ஆறுமுகம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் தங்கபூமி, அண்ணாதுரை, மலையாளம், சேட்டு பீட்டர் சேகர், சிவா, தியாகராஜன், கணேசன், பிரகாஷ், மற்றும் மாவட்ட வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மாநில பதிவாளர் சுற்றறிக்கையின்படியும் தமிழக அரசின் அரசாணைபடியும் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ரூபாய் ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆயிரம் கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு காலிப் பணியிடங்களில் பதவிகளை நிரப்ப வேண்டும். பணியாளர்களிடமிருந்து ஊதியத்தில் பிடிக்கப்படும் வருங்கால வைப்பு தொகையினை வருங்கால வைப்பு அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கார்த்திக் நன்றி கூறினார்.