சிவகிரி,ஏப்.10:டிஎன் புதுக்குடி- வீரசிகாமணி விலக்கில் பறக்கும் படை அலுவலர் பால்ராஜ் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அவ்வழியே வந்த பைக்கில் வந்த தனியார் வங்கி பணம் வசூலிப்பாளர் சிந்தாமணி மடத்து தெரு சேகர் மகன் கலைந்திரராஜா (32) என்பவர் பேக்கில் ₹73,500 இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால் அப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை பறக்கும் படையினர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமான அனிதா, தேர்தல் பிரிவு தாசில்தார் ரவி கணேஷ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
தனியார் வங்கி வசூலிப்பாளரிடம் ₹73,500 பறிமுதல்
previous post