தூத்துக்குடி, ஏப். 10: தூத்துக்குடி வேலவன் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியின் 3வது ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஆனந்த், தொழிலதிபர் தங்கவேலு ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா கலந்து கொண்டு பேசினார். மேலும் கடந்த கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். பூமியின் அற்புதங்கள் என்ற தலைப்பில் பள்ளி மாணவ- மாணவிகள், நடனம் மற்றும் நாடகம் நடத்தினர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஷகிலா தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
வேலவன் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
previous post