மானூர், ஏப்.10:மானூர் அருகே மாயமான அரசு கல்லூரி மாணவிவை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள எட்டாங்குளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(42). இவரது மகள் மானூர் அரசு கல்லூரியில் பி.எஸ்சி 2ம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த 8ம்தேதி அன்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாரியப்பன் மானூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிந்து மாணவியை தேடி வருகிறார்.
மானூர் அருகே கல்லூரி மாணவி மாயம்
previous post