மோகனூர், ஏப்.28: மோகனூர் பேரூராட்சியில், வீடுகளில் மின்மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சினால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என செயல் அலுவலர் கலைராணி எச்சரித்துள்ளார். மோகனூர் தேர்வுநிலை பேரூராட்சியில், உள்ள 15 வார்டுகளில் 15,174 பேர் வசித்து வருகின்றனர். இதில் 5,288 குடியிருப்புகளுக்கு நாள் தோறும் 8,20,000 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 80 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோடைகாலத்தில், தடையில்லா குடிநீர் வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
தண்ணீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு
previous post