ஓசூர், ஏப்.28: ஓசூரில் பள்ளி சிறுமியை துரத்தி, துரத்தி கடித்த தெரு நாயால் காயமடைந்தார். ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து காவல் நிலையம் உள்ளது. இதன் எதிரில் உள்ள மேம்பாலம் அருகில் கோபி கார்டன் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பிறைச்சூடி, திவ்யா தம்பதிகள் இவருடைய மகள் தன்விகா (5). இவர் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று குழந்தைகளுடன் தெருவில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது தெரு நாய் கூட்டம் தன்விகாவை துரத்தி துரத்தி கடித்துள்ளது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்த பெரியவர்கள், அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தையை நாய்களிடமிருந்து மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஓசூர் மாநகராட்சி ஆணையாளருக்கும் மனு அளித்துள்ளனர். உடனடியாக தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஓசூரில் அடிக்கடி குழந்தைகள், இரவு நேரங்களில் தொழிற்சாலைகளுக்கு சென்று வரும் தொழிலாளர்களை கடித்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்
previous post