குமாரபாளையம், ஏப்.28: குமாரபாளையம் பகுதியில் தாபா, ஓட்டல்களில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். இதில் ராஜம் தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் உள்ள ஓட்டலில் 177 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ஓலப்பாளையம் பெரியார் நகரை சேர்ந்த செந்தில்குமார் (46). கைது செய்யப்பட்டார். இது போலவே எம்ஜிஆர்நகர் டாஸ்மாக் பாரில் பதுக்கி வைத்திருந்த 57 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றி குறிஞ்சிப்பாடியை சேர்ந்த சக்திவேல் (26) என்பவரை கைது செய்தனர். மேலும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி (51) ஆகிய 5 பேரை கைது செய்து 350 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மது விற்ற 5 பேர் கைது
previous post