சின்னமனூர், மே 20: தேவாரத்தை சேர்ந்தவர் சுருளி மஸ்தான் (55). சமையல் மாஸ்டர். இவரது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நண்பர்கள் பால்பாண்டி, கோபி ஆகியோருடன் சின்னமனூருக்கு சுருளி மஸ்தான் வந்தார். துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் மார்க்கையன்கோட்டை பகுதியில் உள்ள முல்லைப்பெரியாறு தடுப்பணைக்கு குளிப்பதற்கு 3 பேரும் சென்றனர்.
அங்கு 3 பேரும் குளித்து பொண்டிருந்தபோது, திடீரென ஆழமான பகுதியில் சுருளி மஸ்தான் தண்ணீரில் மூழ்கினார். பால்பாண்டி, கோபி ஆகியோர் நீண்ட நேரம் தேடுதலுக்கு பின் சுருளி மஸ்தானை சடலமாக மீட்டனர். இது குறித்து சுருளி மஸ்தானின் மனைவி சுபேதா சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.