ஈரோடு புறநகர் மாவட்ட அமமுக மாணவரணி செயலாளராக கோபியை சேர்ந்த சங்கர் குமார் செயல்பட்டு வந்தார். சட்டமன்ற தேர்தலில் கோபி தொகுதியில் போட்டியிட சங்கர்குமார் கட்சி தலைமையிடம் விருப்ப மனு அளித்து இருந்தார். ஆனால், அக்கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த சங்கர்குமார் கோபி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து நேற்று சங்கர் குமார் நாய்க்கன் காட்டில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்தார்.* குமரி தேர்தல் களத்தை கலக்கும் பிரம்மச்சாரிகள்பொதுவாழ்வே வாழ்வு என்று வாழ்ந்து வருகின்ற தலைவர்கள் பலரும் இருந்து வருகின்றனர். குமரி மாவட்ட தேர்தல் களத்தில் பொதுவாழ்வே வாழ்வு என்று வாழ்ந்து வருகின்ற வேட்பாளர்களும் உள்ளனர். அந்தவகையில் குமரி மாவட்ட தேர்தல்களம் பிரம்மச்சாரிகள் வசம் உள்ளது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடுகின்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருமணம் ஆகாதவர். மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடுவது இது 9 வது முறையாகும். இதனை போன்று கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகின்ற எஸ்.ஆஸ்டின் திருமணமாகாதவர். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றிபெற்றவர் மீண்டும் திமுக சார்பில் 2 வது முறையாக போட்டியிடுகிறார். இதனை போன்று நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ சார்பில் போட்டியிடுகின்ற எம்.ஆர்.காந்தி பிரம்மச்சாரி ஆவார். பல சட்டமன்ற தேர்தல்களில் களம் கண்டவர். …