மல்லசமுத்திரம், ஏப்.2: எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமம், நல்லையன்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் கோபால்(43). திருமணமாகாதாவர். எல்.ஐ.சி., முகவராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் டூவீலரில் வையப்பமலையில் இருந்து, கொன்னையார் நோக்கி சென்றுள்ளார். மல்லசமுத்திரம் அடுத்த மரப்பரை பிரிவு அருகே வந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சாலை விபத்தில் முகவர் பலி
previous post