Tuesday, May 28, 2024
Home » சத்தியமங்கலத்தில் விவசாயிகள் குழுக்களுக்கு ரூ.2 கோடி கடன்

சத்தியமங்கலத்தில் விவசாயிகள் குழுக்களுக்கு ரூ.2 கோடி கடன்

by Ranjith

 

சத்தியமங்கலம், பிப்.2: சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கம் மற்றும் இந்தியன் வங்கி கிளை சார்பில் விவசாயிகள் குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி பூ மார்க்கெட் வளாகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். துணைத் தலைவர் வேலுச்சாமி, இந்தியன் வங்கி மேலாளர் தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் நாகராஜ் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் வங்கியின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கும் கடன்கள் மற்றும் காப்பீடு திட்டம் குறித்து வங்கி வேளாண் அலுவலர் காயத்ரி விளக்கி பேசினார். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கம் பரிந்துரையின் பேரில் தலா 5 பேர் கொண்ட 40 குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.2 கோடி கடன் வழங்கப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். சங்க துணை செயலாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

10 − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi