கோவை, ஆக. 30: தமிழ்நாடு காங்கிரஸ் ஓபிசி பிரிவு கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருமத்தம்பட்டி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில ஓ.பி.சி. பிரிவு துணை தலைவர் பி.காமராஜ் தலைமை தாங்கினார். கோவை வடக்கு மாவட்ட தலைவர் கேசவராவ் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.குமார் ஜனார்த்தனன், சக்திவேல், மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இதில், ‘‘வருகிற 31-ம் தேதி முப்பையில் நடைபெற உள்ள ‘இந்தியா’ கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்’’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தெற்கு மாவட்ட ஓ.பி.சி பிரிவு தலைவர் நடராஜ் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கசாமி, வட்டார தலைவர் கராத்தே ராமசாமி, மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் சிவா, ஐயப்பன், கணபதி, கனகராஜ், கனகசபாபதி, மாரிமுத்து, ஆறுமுகம் மற்றும் ஓபிசி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாநில பொதுச்செயலாளர் பொன்மகள் கணேஷ் நன்றி கூறினார்.