கோவை, மார்ச் 24: கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி போத்தனூரில் உள்ள தனியார் மஹாலில் நேற்று மாலை நடைபெற்றது. ஐக்கிய ஜமாத் தலைவர் பஷீர் அகமது தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சி.டி.சி. அப்துல் ஜப்பார் வரவேற்றார்.
சேலம் முகமது அபுதாஹிர், மாவட்ட ஜமாத்துல் உலமா செயலாளர் அப்துல் மாலிக் சிராஜி ஆகியோர் ரமலான் நோன்பு பற்றி பேசினர். இதில், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் முஸ்தபா, துணை தலைவர் அப்துல் ரஹீம், பொருளாளர் இக்பால், செயலாளர் இசாக், சட்ட ஆலோசகர் வக்கீல் அனிபா, செல்வபுரம் இப்ராகிம், அக்பர் அல்டாப், பஷீர் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.