Tuesday, May 21, 2024
Home » கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த இருவர் விசாரணைக்கு ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த இருவர் விசாரணைக்கு ஆஜர்

by kannappan

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் விசாரணையானது கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை பொறுத்தவரை 2017 ஏப்ரல் 23ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்ததை அடுத்து தற்போது சயான் உள்ளிட்ட 10 பேர் மீது இந்த வழக்கு விசாரணையானது உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த போது அன்றைய காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையிலான தனிப்படை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றும் முறையான ஆவணங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை, உரிய ஆதாரங்களை திரட்டவில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் கோத்தகிரி காவல் துறையினர் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் பல்வேறு ரகசிய தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் கூடுதல் விசாரணை தேவைப்படுகிறது என்றும் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தனர்.இந்த மனுவிற்கு அனுமதி வழங்கிய நீதிபதி கூடுதல் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள 103 நபர்களில் இதுவரை 40 நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக சயானிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஜெம்சீர்அலியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 8 மற்றும் 9வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கேரளாவை சேர்ந்த சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகியோர் ஆஜராகியுள்ளனர்….

You may also like

Leave a Comment

four × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi