Monday, June 17, 2024
Home » குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் குடிபோதையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் குடிபோதையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

by kannappan

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த மப்பேடு கிராமம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தாமரைச்செல்வி (29) என்ற மனைவியும், மோஷிகா  (6), லக்‌ஷித் (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல சதீஷ்குமார் வேலைக்கு சென்றார். இரவு அவரது மனைவி தமிழ்ச்செல்வி இந்த இரண்டு குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருந்தனர்.அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் குடிபோதையில் இருந்த அவர் திடீரென தாமரைச்செல்வியை மிரட்டி பீரோ சாவியை தருமாறு மிரட்டியுள்ளார். இதனால் பதறிப்போன அவர் அந்த மர்ம நபரை வீட்டில் வைத்து கதவை சாத்திவிட்டு வெளியே ஓடி வந்து கூச்சலிட்டார். இதை தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தாமரைச்செல்வி மப்பேடு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் இளம்பெண்ணை மிரட்டி பணம் பறிக்க முயன்றது இருளஞ்சேரி  கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் (27) என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்….

You may also like

Leave a Comment

eleven + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi