காரைக்கால்,டிச.26: காரைக்காலில் புதிய ஹைமாஸ் விளக்கை நாஜிம் எம்எல்ஏ இயக்கி வைத்தார். காரைக்காலில் ஆட்சியரகம் எதிரே அமைந்துள்ள புனித தேற்றரவு அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தையும் அரசு சமாதான கமிட்டி உறுப்பினருமான பீட்டர் அந்தோணி ஜோஷ்வா மற்றும் அரசு சமாதான கமிட்டி உறுப்பினர்கள் ஆலயத்தின் எதிரே உயர் மின்விளக்கு கோபுரம் அமைத்து தர கோரிக்கை வைத்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு உயர்மின் விளக்கு கோபுரத்தை (ஹைமாஸ் விளக்கு) அமைக்க தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்த நிலையில் நேற்று மாலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் தலைமையில் புதிய ஹைமாஸ் விளக்கு அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், நிர்மலா ராணி குளூனி தலைமை அருட்சகோதரி அன்னம்மாள், அரசு சமாதான கமிட்டி உறுப்பினர் சோழ சிங்கராயர் மற்றும் அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். புனித தேற்றரவு அன்னை தேவாலயத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அரசு சமாதான கமிட்டி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.