ஜெயங்கொண்டம், டிச.27: ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் தீபம் ஏந்தி கிரி வலம் வந்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகன்நாயகி சமேத ஶ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயத்தில் பவுர்ணமி கிரிவல பெருவிழாநேற்று மாலை நடைபெற்றது.
பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை 3 மணிக்கு கணக்க விநாயகர் ஆலயத்தில் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு தீபம் ஏந்தி கோவிலில் துவங்கி வன்னியர்குழி, கணக்க வினாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் பிரகதீஸ்வரர் கோவிலை வந்தடைந்தனர். கோயிலில் 7 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. கிரிவல பெருவிழாவில் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் சிவனடியார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.