கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கூலி தொழிலாளி. இவரின் மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 12ம் தேதி குழந்தையுடன் தனலட்சுமி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கிருந்து மதியம் சுமார் 1 மணியளவில் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார். இதன்பின்னர் தனலட்சுமி அங்குள்ள கழிவறைக்கு செல்வதற்காக தனது குழந்தையை பணம் வசூல் செய்யும் இடத்தில் படுக்க வைத்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அங்கிருந்து குழந்தை மாயமாகியிருந்தது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். பல பகுதிகளில் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். வழக்குபதிவு செய்த போலீசார், பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குழந்தையை தேடி வருகின்றனர். ஆண் குழந்தையை யாரேனும் கடத்தி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தனலட்சுமியிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்….