சென்னை: உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சி.பூர்ணசந்திரனுக்கு பதவி உயர்வு அளித்து, கல்லூரிக் கல்வி இயக்குனராக நியமித்து கடந்த 2021 பிப்ரவரி மாதம் அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கடந்த 6.6.2022ம் தேதி மேற்கண்ட பூர்ணசந்திரனுக்கு வழங்கப்பட்ட பதவியை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் அவர் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, உதகமண்டலம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் ஈஸ்வர மூர்த்தி கல்லூரிக் கல்வி இயக்குனராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது….