Thursday, May 9, 2024
Home » கப்பலூர் டோல்கேட்டில் மறியல் செய்த மருதுசேனை தலைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு

கப்பலூர் டோல்கேட்டில் மறியல் செய்த மருதுசேனை தலைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு

by Neethimaan

திருமங்கலம், மார்ச் 17: கப்பலூர் டோல்கேட்டில் மறியலில் ஈடுபட்ட மருதுசேனை அமைப்பின் நிறுவனர் தலைவர் ஆதிநாராயணன் உள்ளிடோர் மீது திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மருதுசேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் சென்ற கார் மீது கடந்த 14ம் தேதி கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டி பகுதியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இது தொடர்பாக சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டில் 14ம் தேதி இரவு ஆதிநாராயணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து கப்பலூர் டோல்கேட் மேலாளர் மது, நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதில், மறியலில் ஈடுபட்டவர்கள் டோல்கேட் பகுதியில் உள்ள சென்சார் மற்றும் பேரிகார்டுகளை சேதப்படுத்தியதாகவும், டோல்கேட் ஊழியர்களை அவதூறாக பேசியதாவும் கூறி கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில், ஆதிநாராயணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

5 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi