Friday, May 24, 2024
Home » கணவரை பிரிந்து வாழும் நிலையில் 6 மாதம் கர்ப்பம் கல்யாணமாவது… கத்திரிக்காயாவது: திரிணாமுல் பெண் எம்பி. ஆவேசம்

கணவரை பிரிந்து வாழும் நிலையில் 6 மாதம் கர்ப்பம் கல்யாணமாவது… கத்திரிக்காயாவது: திரிணாமுல் பெண் எம்பி. ஆவேசம்

by kannappan

கொல்கத்தா: கணவரை விட்டு பிரிந்து வாழும் நிலையில், பிரபல நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி.யுமான  நுஸ்ரத் ஜகான் 6 மாத கர்ப்பமாக இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான நுஸ்ரத் ஜகான், கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவரை ஜூன் 19, 2019ல் இந்து சடங்குகளின்படி துருக்கியில் திருமணம் செய்து கொண்டார். 2 நாட்களுக்குப் பிறகு, ஜூன் 21 அன்று, இருவரும் கிறிஸ்தவ மத முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமண புகைப்படங்களை பதிவிட்டு, ‘எப்போதும் நிகில் ஜெயினுடன் மகிழ்ச்சியுடன்…’ என்று டிவிட் செய்திருந்தார் நுஸ்ரத். இதற்கிடையில், தம்பதிக்குள் கருத்து வேறுபாடு இருந்ததால் கடந்த ஆறு மாதங்களாக தாங்கள் இருவரும் பிரிந்து இருப்பதாக நிகில் தெரிவித்தார். அதேநேரம், டோலிவுட் நடிகர் யஷ் தாஸ்குப்தாவுடன், நுஸ்ரத் ஜகான் இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. ்அவர் தற்போது 6மாத கர்ப்பிணியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த சூழலில் பெங்காலி செய்தி சேனலுக்கு நிகில் அளித்த பேட்டியில், ‘‘எங்களின் திருமணம் வாழ்க்கை முடிந்து விட்டது. இருவரும் பிரிந்து செல்லும் நேரம் விரைவில் முடிவுக்கு வரும். ஆறு மாதங்கள் இருவரும் சேர்ந்து வாழாமல் இருந்ததால், குழந்தை விவகாரத்தில் நுஸ்ரத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று கூறியுள்ளார். இதனால், நுஸ்ரத் ஜஹானின் 6 மாத கர்ப்பம் குறித்து சர்ச்சை கிளம்பி இருக்கிறது.‘தனிப்பட்ட வாழ்க்கை’கர்ப்பம் குறித்து நுஸ்ரத்  ஜகான் கூறுகையில், ‘‘நிகிலுடனான பிரிவினை நீண்ட காலத்திற்கு முன்பே நடந்தது. தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பொதுவெளியில் பேச விரும்பவில்லை. துருக்கியில் அந்நாட்டு திருமணம் சட்டத்தின்படி நிகிலுடன் திருமணம் நடந்ததால் அது இந்தியாவில் செல்லாது. எனது திருமணம் சட்டபூர்வமானதல்ல. இது ஒரு கலப்பு திருமணம். இதற்கு இந்தியாவில் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், அது செய்யப்படவில்லை. சட்டத்தின்படி, இது உறவில் இருப்பது அல்லது திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்ததாகத்தான் அர்த்தம்,’’ என்றார்….

You may also like

Leave a Comment

fifteen + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi