Sunday, June 16, 2024
Home » குறைந்தபட்ச ஆதார விலை நெல்லுக்கு ரூ.72 அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

குறைந்தபட்ச ஆதார விலை நெல்லுக்கு ரூ.72 அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

by kannappan

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு விநியோகம் செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் மத்திய வேளாண் துறை அமைச்சர் தோமர் அளித்த பேட்டியில், “காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படுகிறது. 2021-2022 நிதியாண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.1,868-ல் இருந்து ரூ.72 அதிகரித்து ரூ.1,940 ஆக நிர்ணயிப்பதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. கம்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ரூ.2,150ல் இருந்து ரூ.2,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது,’’ என்றார்….

You may also like

Leave a Comment

nine + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi