Monday, June 17, 2024
Home » கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு; வென்டிலேட்டரை நீக்கியதால் கொரோனா நோயாளி உயிரிழப்பு: இளம்பெண் கதறி அழும் வீடியோ வைரல்

கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு; வென்டிலேட்டரை நீக்கியதால் கொரோனா நோயாளி உயிரிழப்பு: இளம்பெண் கதறி அழும் வீடியோ வைரல்

by kannappan

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜா (49). கடந்த 5ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் திடீரென உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மனைவி கயல்விழி மற்றும் அவரது உறவினர்கள், ராஜாவிற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ராஜாவிடம் இருந்து வென்டிலேட்டரை எடுத்து வேறு ஒரு நோயாளிக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர் உயிரிழந்ததாகவும், அவரது உயிரிழப்புக்கு மருத்துவர்களே காரணம் எனக்கூறி திடீரென மருத்துவர்களுடன் அவரது உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த ராஜாவின் மனைவி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறுகையில், எனது கணவர் சிகிச்சையில் இருந்தபோதே திடீரென மருத்துவர் ஒருவர் வந்து நான் சொல்வதை சிறிதும் கேட்காமல் அவருக்கு வைக்கப்பட்டிருந்த வென்டிலேட்டரை எடுத்து சென்றார்.  இதனால் என்னிடம் என் கணவர் என்னால் சுவாசிக்க முடியவில்லை என்று கூறினார். நான் அவரது நெஞ்சில் அழுத்தி பார்த்த போது சிறிதளவு மூச்சு வந்தது. இதையடுத்து நான் மருத்துவரிடம் சென்று அவரை வந்து பார்க்குமாறு கூறினேன். ஆனால் யாரும் வந்து பார்க்கவில்லை. இதனால் அவர் இறந்துபோனார் என்று கதறி அழுதபடியே கூறினார்.புதிய வென்டிலேட்டர் மாற்றவே மருத்துவர் எடுத்து சென்றார்இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ராஜா வென்டிலேட்டர் இயந்திரத்தை எடுத்து வைத்துவிட்டு உணவு சாப்பிடுவார். அதன்படி நேற்றும் அவர் உணவு சாப்பிடுவதற்காக வென்டிலேட்டரை வெளியே எடுத்துவைத்திருந்தபோது அங்கு சென்ற மருத்துவர்கள் அந்த வென்டிலேட்டரை மாற்றிவிட்டு புதிய வென்டிலேட்டரை வைப்பதற்காக அவரது மனைவியிடம் சொல்லிவிட்டு எடுத்துச் சென்றனர். இந்நிலையில் ராஜா உயிரிழந்துவிட்டார்.  ராஜாவின் மனைவி கூறுவது போல வேறு ஒருவருக்கு பொருத்துவதற்காக வென்டிலேட்டர் எடுத்துச் செல்லப்படவில்லை.  ஒருவரிடமிருந்து வென்டிலேட்டரை எடுத்து மற்றொருவருக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றனர்….

You may also like

Leave a Comment

fourteen + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi