கிருஷ்ணகிரி, மார்ச் 9: கிருஷ்ணகிரி கலால் இன்ஸ்பெக்டர்(பொ) ஷர்மிளா பானு மற்றும் போலீசார், காவேரிப்பட்டணம் சாம்சன்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள மருந்து கடையின் முன்பு, சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரிடம் விசாரித்தனர். அதில், அவர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த லாரி டிரைவான கண்ணப்பன் (27) என்பதும், அவர் வைத்திருந்த பையில் சோதனை செய்த போது, அதில் ₹80 ஆயிரம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
previous post