Monday, June 17, 2024
Home » ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா; நாளை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.!

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா; நாளை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.!

by kannappan

புபனேஸ்வர்: ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். நாளை மதியம் 12 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஆளும் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். புதிய அமைச்சரவை அமைக்கப்பட உள்ள நிலையில், 20 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஒடிசா சட்டப் பேரவைத் தலைவரிடம் அளித்துள்ளனர். ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான புதிய அமைச்சர்கள் நாளை மதியம் 12 மணிக்கு பதவியேற்பார்கள் என கூறப்படுகிறது. ஆளும் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் அதன் ஐந்தாவது பதவிக்காலத்தின் மூன்று ஆண்டுகளை மே 29 அன்று நிறைவு செய்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்திற்கு, முன்னதாக மாநிலத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களுக்கு தங்கள் ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளன. குறிப்பாக 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்தவும், புத்துயிர் பெறவும் ஒரு முக்கிய பயிற்சியாக இந்த மறுசீரமைப்பு கருதப்படுகிறது. புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நாளை காலை 11.45 மணிக்கு ராஜ்பவன் மாநாட்டு மண்டபத்தில் பதவியேற்க உள்ள நிலையில், பிரதீப் அமத் மற்றும் லத்திகா பிரதான் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, ஒடிசாவில் ஆளும் பிஜேடி வெள்ளிக்கிழமை பிரஜ்ராஜ்நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியைப் பதிவுசெய்தது.அதன் வேட்பாளர் அலகா மொகந்தி 66,122 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சியான பாஜகவை 2019-க்குப் பிறகு முதல் முறையாக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 2024 ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் பொதுத் தேர்தல் மற்றும் மாநில வாக்கெடுப்புக்கு முன்னதாக நடைபெற்ற இடைத்தேர்தலில், மொகந்தி 93,953 வாக்குகள் பெற்று 27,831 வாக்குகள் பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் கிஷோர் பட்டேலை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

ten + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi