ஏரல், மார்ச் 11:ஏரல் பகுதி பள்ளிகளில் பயிலும் 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அரசு பொதுத் தேர்வு எழுதுவதற்கு வசதியாக அதற்கு தேவையான பேனா, பென்சில், கட்டர் உட்பட எழுதுப்பொருட்கள் அடங்கிய அத்தியாவசிய பொருட்களை ஏரல் அன்னை விஜிஎஸ் அறக்கட்டளையின் நிறுவனர் அன்னை விஜி சரவணன் ஏற்பாட்டில் பள்ளிகளுக்கு சென்று வழங்கப்பட்டது. இப்பொருட்களை அறக்கட்டளை அறங்காவலர் குழு தலைவர் கிங்ஸ்டன் ஜெபக்குமார் நிர்வாகிகளுடன் ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஏரல் சுற்றுவட்டார பள்ளிகளுக்கு நேரில் சென்று 11, 12ம் வகுப்பு படித்து வரும் மாணவ- மாணவிகள் 400 பேருக்கு நேரடியாக வழங்கி அவர்கள் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்தர். நிகழ்ச்சிகளில் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள்- அலுவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.