Saturday, May 18, 2024
Home » எருக்கஞ்சேரி, அடையாறு கழிவு நீரிறைக்கும் நிலையம் இன்று செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்

எருக்கஞ்சேரி, அடையாறு கழிவு நீரிறைக்கும் நிலையம் இன்று செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்

by Karthik Yash

சென்னை, மே 12: எருக்கஞ்சேரி, அடையாறு கழிவு நீரிறைக்கும் நிலையம் இன்று செயல்படாது என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மண்டலம்-4க்குட்பட்ட எருக்கஞ்சேரி கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது. எனவே, மண்டலம்-4, 5, 6 மற்றும் 8க்குட்பட்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை ஏற்பட்டால் அவசரத் தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற பகுதி அலுவலர்களையும் மற்றும் தலைமை அலுவலக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தையும் தொடர்பு கொள்ளவும்.

பகுதிப் பொறியாளர் – 4 கைபேசி எண். 8144930904
பகுதிப் பொறியாளர் – 5 கைபேசி எண். 8144930905
பகுதிப் பொறியாளர் – 6 கைபேசி எண். 8144930906
பகுதிப் பொறியாளர் – 8 கைபேசி எண். 8144930908
தலைமை அலுவலகம், 044-4567 4567 (கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்).
அடையாறு: அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட காந்தி நகர் முதலாவது பிரதான சாலையில் தற்போதுள்ள 1050 மி.மீ விட்டமுள்ள கழிவுநீர் உந்துகுழாயில் புதிதாக பதிக்கப்பட்ட 1000 மி.மீ விட்டமுள்ள கழிவுநீர் உந்துகுழாயை இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள அடையாறு கழிவுநீர் உந்துநிலையம் செயல்படாது.
எனவே, மண்டலம்-9 மற்றும் 13க்குட்பட்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை ஏற்பட்டால் அவசரத் தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற கீழ்க்காணும் பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். பகுதிப் பொறியாளர் – 9 (தேனாம்பேட்டை) கைபேசி எண்.8144930909 ஐஸ் ஹவுஸ், மயிலாப்பூர், மந்தைவெளிபகுதிப் பொறியாளர் -13 (அடையாறு) கைபேசி எண். 8144930913 அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

four − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi