சென்னை, மே 12: , தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உதவி பொறியாளர் இயக்குதல் மற்றும் பராமரிப்பு தரமணி பிரிவு அலுவலகம், ஏரிக்கரை தெரு, மாநகராட்சி வணிக வளாகம், கோட்டூர்புரம், சென்னை – 85 என்ற முகவரியில் இயங்கி வந்தது, இந்த அலுவலகம் மே 15ம் தேதி முதல் ரஞ்சித் ரோடு, 110 கி.வோ துணை மின்நிலையம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், கோட்டூர்புரம், சென்னை- 85 என்ற முகவரியில் இயங்கும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.