ஈரோடு, ஏப். 15: ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளில் தமிழ் புத்தாண்டையொட்டி கடந்த 2 நாளில் வரத்தான 129.53 டன் காய்கறிகள் ரூ.42.69 லட்சத்திற்கு விற்பனையானது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.
இந்த உழவர் சந்தைகளுக்கு தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று முன்தினமும், நேற்றும் விவசாயிகள் அதிகளவிலான காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதேபோல், வழக்கத்தை விட ஏராளமான மக்ககள் உழவர் சந்தைகளுக்கு வந்து காய்கறி, பழங்களை வாங்கி சென்றனர்.
இதில், சம்பத் நகர் உழவர் சந்தையில் மட்டும் கடந்த 2 நாளில் வரத்தான 50.35 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.17 லட்சத்து 51 ஆயிரத்து 148க்கு விற்பனையானது. இதேபோல், மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளுக்கும் மொத்தமாக வரத்தான 129.53 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.42 லட்சத்து 69 ஆயிரத்து 152க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.