வலங்கைமான், மார்ச் 14: வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் அரசு சாதனை விளக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் ஆணைக்கு இணங்க, திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் கலைவாணன் எம் எல் ஏ ஆலோசனையின் படி, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலங்குடி ஊராட்சியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தெட்சிணாமூர்த்தி தலைமையில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் அரசின் சாதனை விளக்கும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மோகன், திமுக கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் கோபால், ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராசாத்தி, திமுக நிர்வாகிகள் மூர்த்தி, ரஞ்சித்குமார், சுரேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.