சேலம், பிப்.11: சேலம் தாதகாப்பட்டி பொம்மண்ண செட்டிக்காடு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (எ) ரஞ்சித்குமார்(40). இவர் கடந்த 2011ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவிக்கும், தாய்க்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பரோல் கேட்டிருந்தார். இதையடுத்து 28 நாட்கள் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர், நேற்று சேலம் சிறையில் இருந்து வெளியே வந்தார். நிபந்தனையுடன் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.