அவிநாசி, ஏப்.2:நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அவிநாசி அருகே தெக்கலூர் என்ற பகுதியில், ராஜேஷ் என்பவர் தலைமையில், வாகனச் சோதனை மேற்கொண்டனர். அப்போது,அவ்வழியாக பைக்கில் வந்த செல்லமுத்து என்பவரிடமிருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பெற்ற ரூ.1,34,000ஆனது கைப்பற்றப்பட்டது.
மேலும், இதேபோல், தேர்தல்நிலை கண்காணிப்பு குழுவை சேர்ந்த முத்தழகன் தலைமையிலான குழுவினர் நம்பியூர் சாலையில் தணிக்கை செய்து கொண்டிருந்த போது பைக்கில் வந்த நவீன் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.57,200 கைப்பற்றப்பட்டது. இரண்டும் சேர்த்து ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 200 ரூபாயை, அவிநாசி தேர்தல் பறக்கம்படை டீமை சேர்ந்த அவிநாசி கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனன் மூலமாக, அவிநாசி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.