திருப்பூர், ஏப். 2: திருப்பூர் பாண்டியன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (48).இவர் குப்பையில் இருந்து பொருட்களை பிரித்தெடுத்து சென்று விற்பனை செய்து வருகிறார். நேற்று முன் தினம் பி.என்.ரோடு பூலுவப்பட்டி அருகே உள்ள பாறைக் குழியில் ரமேஷ் குப்பையில் இருந்து பொருட்களை பிரித்தெடுத்தார். அப்போது அவருடன் பெருமாநல்லூரை சேர்ந்த கார்த்தி (38) மற்றும் திருச்சியை சேர்ந்த சண்முகம் (35) ஆகியோரும் அதே பணியை செய்துள்ளனர்.
இதையடுத்து அன்று இரவு பாறைக்குழி அருகே 3 பேரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது குப்பையில் இருந்து பொருட்களை பிரிப்பது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்தி சண்முகம் உள்ளிட்ட இருவரும் சேர்ந்து ரமேஷை கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த ரமேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தி, சண்முகம் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.