கருங்கல், ஏப். 5: கருங்கல் சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தென்தமிழக அளவிலான ஆடவர் கைப்பந்து போட்டி 2 நாள் நடந்தது. போட்டியின் நிறைவு விழா நடந்தது. உடற்கல்வி இயக்குனர் ஏ.பி. சீலன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ் பங்கேற்று பரிசு, கேடயங்களை வழங்கினார். போட்டியில் முதலிடத்தை பரமக்குடி சாகிர் உசேன் அணியினரும், 2வது இடத்தை சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கலைக்கல்லூரியும், 3வது இடத்தை குமரியை சேர்ந்த டேனியல் கிளப் அணியும், 4வது இடத்தை திருநெல்வேலி பிஎஸ்என் கல்லூரியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் மைக்கேல் ஆரோக்கியசாமி, ஆன்மீக வழிகாட்டி அருட்தந்தை அஜின் ஜோஸ், துணை முதல்வர் சிவனேசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.