திருச்சி: யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் 7 நாள் காவல் கேட்டிருந்த நிலையில் ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டுள்ளார்.