ஃபார்ம் ஈஸி!மழைக்காலம், குளிர்காலம் என இரண்டுமாக ஒன்றுசேர்ந்து வரும் வேளை. நம் வீட்டில் பெரியவர்கள் குழந்தைகள் என இருக்கும் பட்சத்தில் உடனடி மருந்து தேவை மற்றும் குறைவான விலையில் மருந்துகள் தேவை என அனைத்திற்குமான ஒரே இடமாக இருக்கிறது ஃபார்ம் ஈஸி செயலி. ஒன்று அல்லது இரண்டு தினங்களில் உங்களுக்கான மருந்துகள் வீடு தேடி வந்து சேர்ந்துவிடும். மருத்துவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகள் குறித்த பிரிஸ்கிரிப்ஷனைப் புகைப்படமாக பகிர்ந்தால் போதும். உங்களுக்கான மருந்துகள் 24-48 மணிநேரங்களில் உங்களை வந்தடையும். வீட்டில் இருவருமே வயதானவர்கள், அல்லது வெளியில் சென்று வாங்கக் கூடிய ஆட்கள் இல்லை என்போரும் கூட இந்த செயலியைப் பயன்படுத்தலாம். மேலும் கடைகள், மருத்துவமனைகளைக் காட்டிலும் இந்தச் செயலியில் நிறைய ஆஃபர்களும் இருப்பது கூடுதல் சிறப்பு.ஆஹா செம்பருத்தி!செம்பருத்திப் பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் அனைத்து புண்களும் விரைவில் ஆறும். ஒரு மாத காலம் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் மகரந்தக் காம்பு உலர்த்திய தூள் 5 கிராம் பாலில் சாப்பிட மலட்டுத் தன்மை நீங்கும். தங்கச்சத்து இப்பூவில் இருப்பதால் தாதுவிருத்திக்கு மிகவும் சிறந்ததாகும். 10 பூவினை மென்று தின்று பால் அருந்தினால் நாற்பது நாளில் தாது விருத்தி ஏற்படும். நீர்த்துப்போன விந்து கெட்டிப் படும். செம்பருத்திப் பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர்ச் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி ரத்தத்தில் இருக்கும் நஞ்சுகளை வெளியேற்றும். பூவை நீரிட்டுக் காய்ச்சி வடிகட்டி பாலும் சர்க்கரையும் சேர்த்து காலை மாலை பருக மார்புவலி, இதய பலவீனம் தீரும். பத்து செம்பருத்திப் பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட்டு வருவதால் அதிக ரத்த போக்கு ஏற்படுவது நிற்கும். இருதய நோய் ரத்த அழுத்தநோய் குணமடையப் பயன்படும். பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி தடவ முடி வளரும். செம்பருத்திப் பூ சாற்றுடன் சமஅளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடிகட்டி, கண்ணாடி புட்டிகளில் பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால் தலை முடி கறுத்து அடர்த்தியாக வளரும். செம்பருத்திப் பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளித்து வந்தால் தலையில் இருக்கும் பேன்கள் தொல்லை நீங்கும்.-கவிதா சரவணன்…