நெல்லை, மார்ச் 20: ஆலடியூரில் திருவள்ளூர் கலைக்கல்லூரி நாட்டு நலத்திட்ட அணியினரின் சிறப்பு முகாம் ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதையொட்டி அருணா கார்டியாக் கேர் நிறுவனம் மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் இலவச இருதய சிகிச்சை முகாம் நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு டாக்டர் அருணாசலம் தலைமையிலான கார்டியாக் கேர் நிறுவன மருத்துவ குழுவினர் இருதய சிகிச்சை அளித்தனர். அத்துடன் ரத்த அழுத்தம், எடை, உயரம், சுகர், இசிஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு தேவைப்பட்டோருக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கினர். கல்லூரி நிர்வாகிகள் நன்றி கூறினர்.
அருணா கார்டியாக் கேர் சார்பில் ஆலடியூரில் இலவச இருதய சிகிச்சை முகாம்
previous post