அம்பை, ஏப்.27: அம்பையில் பூக்கடை பஜாரில் நேற்று காலை இறுதி சடங்குக்கான பொருட்கள் வாங்க அங்குள்ள கடைக்கு இருவர் வந்தனர். அவர்களை கடைக்காரர் சிறிது நேரம் காத்திருக்க கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவர்கள் மதுபோதையில் திடீரென கடை மீதும், சாலையில் சென்றவர்கள் மீதும் கற்களை வீசித் தாக்கி ரகளைெசய்தனர். பொதுமக்கள் அவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆதிசக்தி (22), வேல்சாமி மகன் மாரிச்செல்வம் (23) என்பது தெரிய வந்தது. அம்பையில் உள்ள உறவினரின் துக்க நிகழ்வுக்கு வந்துள்ளனர். அவர்கள் சடங்குகள் செய்ய பொருட்கள் வாங்க கடைக்கு சென்றபோது போதையில் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து அம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.