சென்னை: சென்னை, பட்டாளம், சி.ஆர்.கார்டன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(35). தனியார் கட்டுமான நிறுவனஊழியர். இந்நிலையில், நேற்று மதியம் 1.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் அண்ணா வளைவு எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். திடீரென நிலைதடுமாறி மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் மேலிருந்து சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு கை, கால்கள் எலும்பு முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். இதனை நேரடியாக பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கு பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து காயமடைந்த சுரேசை மீட்டு 108 ஆம்பலன்ஸ் வாகனம் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. …