Sunday, June 16, 2024
Home » சட்டக் கல்லூரி மாணவன் கைது விவகாரம் 2 காவலர்கள் சஸ்பெண்ட்: 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட மூவர் மீது துறை ரீதியான நடவடிக்கை

சட்டக் கல்லூரி மாணவன் கைது விவகாரம் 2 காவலர்கள் சஸ்பெண்ட்: 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட மூவர் மீது துறை ரீதியான நடவடிக்கை

by kannappan

சென்னை: சென்னை கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் சந்திப்பு அருகே கடந்த வியாழக்கிழமை அதிகாலை கொடுங்கையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வியாசர்பாடி புது நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல்ரஹீம் (21), அவ்வழியாக சென்று கொண்டிருந்தபோது, போலீசார் அவரிடம் முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தினர். அப்போது அப்துல் ரஹீம் அங்கு பணியில் இருந்த காவலர் உத்திரகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் உத்திரகுமார் அளித்த புகாரின்படி, வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அப்துல்ரஹீமை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, அப்துல் ரஹீமை போலீசார் கடுமையாக தாக்கியதாகஏட்டு பூமிநாதன், காவலர் உத்திரகுமார் ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தும், அன்று இரவு பணியில் இருந்த எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நசீமா மற்றும் கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜன், முதல் நிலை காவலர் ஹேமநாதன் ஆகிய 3 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்….

You may also like

Leave a Comment

twelve + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi