சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டார். டெல்லியில் வைத்து என்சிபி அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்து ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்தப்படுகிறது. ரூ.2,000 கோடி மதிப்புள்ள சூடோபெட்ரைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.