Saturday, May 11, 2024
Home » தொழிலதிபரை வெட்டிய வழக்கில் 4 வாலிபர்கள் மதுரை கோர்ட்டில் சரண்: மேலும் 3 பேர் கைது

தொழிலதிபரை வெட்டிய வழக்கில் 4 வாலிபர்கள் மதுரை கோர்ட்டில் சரண்: மேலும் 3 பேர் கைது

by Ranjith

கூடுவாஞ்சேரி: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் அடுத்த ஆதனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சக்கரபாணி (43). இவருக்கு மனைவி சுலோச்சனா (36), மகன் சபரீஷ் (10), மகள் யாஷிதா (5) ஆகியோர் உள்ளனர். இதில், சக்கரபாணி திமுகவில் ஊராட்சி விவசாய அணி செயலாளராக இருந்தார். மேலும் அவர் லாரி, பொக்லைன் இயந்திரங்கள் வைத்தும், ரியல் எஸ்டேட் தொழில் செய்தும் வருகிறார். இந்நிலையில், வீட்டிலிருந்த அவரை கடந்த 21ம் தேதி காலை 8 மணி அளவில் 7 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்து அவரை இழுத்து போட்டு கத்தி மற்றும் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டியது.

மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆதனூர் அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வந்த ஸ்கெட்ச் வெங்கடேசன் என்பவரை கொலை செய்த கும்பல் சக்கரபாணியிடம் தொடர்ந்து ரவுடி மாமுல் கேட்டு வந்ததாகவும், இதில் அவர் தர மறுத்ததால் 7 பேர் கொண்ட கும்பல் வெட்டியதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவான காட்சிகளை வைத்து நேற்று முன்தினம் காலை மூன்று பேரை போலீசார் பிடித்தனர். இந்த மூன்று பேரும் பிடிப்பட்ட தகவல் தெரிந்ததும், இந்த வழக்கு தொடர்பாக மண்ணிவாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த செல்வராஜ் மகன் அமரவேல் (23), முருகானந்தம் மகன் புகழ்வாணன் (23), கோவிந்தன் மகன் சக்திவேல் (24), முருகன் மகன் ரமேஷ்(19) ஆகிய நான்கு பேரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் அன்றையதினம் மாலை சரணடைந்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய பிடிப்பட்ட திருக்கோவிலூர் என்.ஜி.ஓ நகர், பெரியார் தெருவை சேர்ந்த சீதாராமன் மகன் சேது (எ) சேதுராமன் (26), நாவலூரை சேர்ந்த ஜானகிராமன் மகன் பார்த்திபன் (எ) ரஞ்சித் (23), மண்ணிவாக்கம் விரிவு பகுதி, கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் மகன் ஆரோன் (21) ஆகிய 3 பேரையும் மணிமங்கலம் போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். பின்னர், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

12 + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi