உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லேயா… இவர்கள் சொட்டும் ஒவ்வொரு வியர்வை துளியும் ஒவ்வொரு குடும்பத்தை காப்பாற்றுகிறது. ஆனால், இந்த உழைப்பாளி படும் கஷ்டம் என்றைக்கும் வெளிச்சத்துக்கு வந்ததில்லை. தற்போதைய டிஜிட்டல் மயத்தால் இவர்களின் கஷ்டம் வெளிச்சத்துக்கு வருகிறது. மண் அள்ளும் தொழிலாளி ஒருவர் உடம்பில் வியர்வையுடன் மண் ஒட்டிக் கொண்டதால் அவருக்கு முதுகில் அரிப்பு ஏற்பட்டது. துணியால் துடைத்தும் அவருக்கு தொடர்ந்து உடம்பு அரித்தது. இதனால் என்ன செய்வது என்ற தெரியாத அந்த தொழிலாளி பொக்லைன் இயந்திரம் மூலம் முதுகை சுரண்டி பிரச்னையை தீர்த்துக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.