அரசியலை விமர்சிக்க வேண்டியது உங்கள் கடமை என்றும் சீட்டுக்காக வரவில்லை நாட்டுக்காகவே வந்திருக்கிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவுவாயிலாக தமிழ்நாடு இருந்திருக்கும். அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட்டால்தான் நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்களும் பாதுகாக்கப்படும் என்று திருச்சி தொகுதி வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து கமல்ஹாசன் வாக்கு சேகரித்து வருகிறார்.