விருதுநகர்: விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 16.7 கிலோ நகைகளை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மதுரையில் இருந்து 3 கூரியர் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட 16.7 கிலோ நகைகள், பறக்கும் படை சோதனையில் சிக்கின. நாகர்கோவில், மார்த்தாண்டம், சிவகாசி, ராஜபாளையம் பகுதிகளில் உள்ள நகைக் கடைகளுக்கு நகைகள் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட 16.7 கிலோ தங்க நகைகளை கருவூலத்தில் தேர்தல் பறக்கும் படை ஒப்படைத்தது.