கடலூர்: நெய்வேலி அருகே நண்பனை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை, ரூ.6,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சகோதரிகளை காதலிப்பதில் ஏற்பட்ட மோதலில் நண்பன் தமிழ்வளவனை, ஆகாஷ் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். இந்த வழக்கில் ஆகாஷுக்கு ஆயுள் தண்டனை, ரூ.6,000 அபராதம் விதித்தது விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.