திருவள்ளூர்: தமிழ்நாட்டில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தனித்தனியாக தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளனர். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 11 முதல் 24-ம் தேதி வரை 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு நடைபெறும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் 21 முதல் 28 வரை ஆண்டு தேர்வு நடைபெறும் என அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதேபோல் அந்தந்த மாவட்டங்களுக்கும் தனித்தனியே ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்கா வண்ணம் தேர்வு நடத்த வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டு தேர்வுக்கான முழு கால அட்டவணையையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.