சென்னை: உலக கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மக்கள் திரண்டு நின்று அமோக வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகக்கோப்பையில் 2ம் இடம் பிடித்ததற்காக தமிழக அரசு சார்பில் ரூ.30லட்சம் வழங்கப்படவுள்ளது.