உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஒன்றியத்திற்கு உட்பட்ட 76 பயனாளிகளுக்கு, வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார், நகர செயலாளர் பாரிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 76 பயனாளிகளுக்கு தலா ரூ.2.40 லட்சம் விதம் மொத்தம் ரூ.1 கோடியே 82 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை வழங்கினார்.